இந்தியா, இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாம் டிரன்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நேற்று துவங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. தவான் 12, புஜாரா 38, கோலி 1 ரன்னில் ஆட்டமிழந்தனர். மிக பொறுமையாக ஆடிய ரகானே 81 பந்தில் 32 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் அபாரமாக ஆடிய முரளி விஜய் டெஸ்ட் அரங்கில் தனது 4 ஆவது சதத்தை அடித்து அசத்தினார்.
இந்திய அணி ஆட்ட நேர இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு 259 ரன்களுடன் இருந்தது. முரளி விஜய் 122, தோனி 50 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் ஆன்டர்சன் 2, பிராட், பிளங்கெட் தலா 1 விக்கெட் எடுத்தனர்.