இந்நிலையில், ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் அளித்துள்ளப் பேட்டியில், “சமீபத்தில் முடிந்த இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி தொடருக்கு அமைக்கப்பட்ட ஆடுகளங்களுக்கும், உலக கோப்பை போட்டிக்கு தயாரிக்கப்படும் ஆடுகளங்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்.
ஆசிய கண்டத்தை சேர்ந்த இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் பவுன்ஸ் அதிகம் ஆகும் ஆடுகளங்களில் விளையாட தடுமாறுவார்கள். நடப்பு சாம்பியனான இந்திய அணி, உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை தங்க வைக்க முடியாது.