இந்த டி 20 போட்டியில் தொடர் வெற்றிகளை பெற்ற இந்திய அணி, முதல் அணியாக அரை இறுதிக்குள் நுழைந்தது. இந்தியாவிற்கு மீண்டும் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இறுதிபோட்டியில் இலங்கையை எதிர்கொண்ட இந்தியா, யுவ்ராஜ் சிங்கின் மோசமான பேட்டிங்கால் வெற்றி வாய்ப்பை தவறவிட்டதாக செய்திகள் வெளியாகின.