''ஹிட்மேன்'' அரைசதம் விளாசல்.....இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி !

செவ்வாய், 12 ஜூலை 2022 (21:46 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி-20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில்,  இன்று  ஒரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் டாஸ் வென்றதை அடுத்து இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 25.2 ஓவர்களில் இந்திய அணியின் அபார பந்து வீச்சு காரணமாக 110 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

பும்ரா மிக அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பதும் ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் களம் இறங்கினர். இதில், ரோதித் சர்மா 78 ரன் களும்(58), தவான்31( 54) ரன் கள் அடித்து விக்கெட் இழப்பிற்கு 18.4 ஓவர்களில் 114 ரன் கள் அடித்து வெற்றி பெற்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்