டிராவிட்டுக்கு பதில் நெஹ்ராவா… ஹர்பஜன் சிங்கின் கருத்து!

வியாழன், 24 நவம்பர் 2022 (15:20 IST)
இந்திய அணிக்கு டி 20 போட்டிகளில் மட்டுமாவது நெஹ்ரா தலைமைப் பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

டி 20 உலகக் கோப்பையை வெல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி அரையிறுதியோடு உலகக்கோப்பை தொடரில் இருந்து விடை பெற்றுள்ளது. இது சம்மந்தமாக பல முன்னாள் இன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆன ராகுல் டிராவிட்டுக்கும் தற்காலிகமாக நியுசிலாந்து தொடரில் ஓய்வளிக்கப்பட்டது. மேலும் டிராவிட் மீது முன்னாள் வீரர்கள் பலர் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்போது ஹர்பஜன் சிங்,  டி 20 போட்டிகளுக்கு மட்டுமாவது இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஆஷிஷ் நெஹ்ராவை நியமிக்க வேண்டும் என ஹர்பஜன் சிங் பரிந்துரை செய்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்