இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக உருவெடுத்துள்ள ரெய்னா உத்திரபிரதேச மன்னின் சொந்தக்காரர் ஆவார். இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலம் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். தற்போது ரெய்னா தனது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 10 ஆண்டுகளை கடந்து அசத்தியுள்ளார்.
இதுவரை 218 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ள ரெய்னா 5,500 ரன்களை சேகரித்துள்ளார். இவற்றில் 5 சதம், 35 அரை சதம் ஆகியவையும் அடங்கும். அனைத்து ரக கிரிக்கெட் ஆட்டங்களான டெஸ்ட், ஒரு நாள் மற்றும், டி20 கிரிக்கெட்டிலும் சதம் அடித்த ஒரே இந்திய கிரிக்கெட் வீரர் ரெய்னா என்பது கூடுதல் சிறப்பு.