பயிற்சியின்றி களமிறங்க தோனிக்கு அனுமதி

செவ்வாய், 6 டிசம்பர் 2016 (10:05 IST)
இரண்டு மாத இடைவெளியைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியுடன் வரும் ஜனவரி மாதம் நடைப்பெறவுள்ள ஒருநாள் போட்டி தொடரில் தோனி விளையாடவுள்ளார். இதில் தோனி பயிற்சியின்றி களமிறங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

 
இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் தோனி கடந்த அக்டோபர் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடினார். அதைத்தொடர்ந்து இரண்டு மாத இடைவெளிக்கு பின் வரும் ஜனவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடைப்பெற உள்ள ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளார்.
 
இந்நிலையில் அவர் பயிற்சியின்றி களமிறங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுவே பயிற்சியின்றி களமிறங்குவது அவருக்கு முதல் ஒருநாள் போட்டியாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்