உலகக்கோப்பை போட்டிக்கு முன்பு இந்திய அணி மோசமான நிலையில் இருந்தது. அப்படிப்பட்ட அணியை வைத்துதான் தோனி அரை இறுதி வரை கொண்டு சென்றார். இதற்கு அவரது திறமையான செயல்பாடுதான் காரணம். வங்கதேச சுற்றுப்பயணத்தில் விளையாடி வரும் இந்திய அணியில் பிளவு இருந்தது. வீரர்கள் அறையில் ஒற்றுமை இல்லை. மாறுபட்ட சூழ்நிலை நிலவுகிறது.
முதல் ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு தோனி என்னிடம் பேசினார். அணியில் உள்ள சீனியர் வீரர்களில் சிலர் எனக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்றார். அவர்கள் மீது தோனி கடும் அதிருப்தியில் உள்ளார். கடந்த சில மாதங்களாக இந்திய அணியின் சூழ்நிலை சரியில்லை. பயிற்சியாளர் பிளட்சரை தோனி இழந்து விட்டார். அவர் ஒரு சிறந்த பயிற்சியாளர். இருவருக்கும் இடையே உள்ள தொடர்பு முற்றிலும் வேறுபட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.