கிரிக்கெட் சங்க தலைவர் பதவி: சரத்பவார் விலகல்

திங்கள், 25 ஜூலை 2016 (14:23 IST)
மும்பை சிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து சரத் பவார் விலக முடிவு செய்துள்ளார்.


 

லோதா கமிட்டியின் பரிந்துரைகளை 6 மாதத்திற்குள் அமல்படுத்தும்படி சுப்ரீம் கோர்ட்டு, இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு சமீபத்தில் உத்தரவிட்டது. லோதா கமிட்டியில், ”மத்திய மற்றும் மாநில கிரிக்கெட் நிர்வாக அமைப்பில் மந்திரிகள், அரசு அதிகாரிகளுக்கு இடமில்லை, 70 வயதுக்கு மேல் உள்ளவர்கள் நிர்வாகிகளாக தொடரக் கூடாது, ஒருவர் 9 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் இருக்கக்கூடாது, ஒரு மாநிலத்துக்கு ஒரு கிரிக்கெட் சங்கத்துக்கு தான் ஓட்டுரிமை” என்று பரிந்துரைக்கப்பட்டது.

இந்த நிலையில் லோதா கமிட்டியின் சிபாரிசுகள் குறித்து நேற்று விரிவாக ஆலோசனை நடத்திய மும்பை கிரிக்கெட் சங்கம் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளது. இதை அடுத்து, மும்பை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் 75 வயதான சரத் பவார் பதவி விலக முடிவு செய்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்