ஐ.பி.எல் போட்டிகள் முடிந்த பின்னர் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் போட்டித் தொடர் நடத்தப்படுகிறது. இதில் இந்தியாவின் முன்னணி ஐ.பி.எல். அணிகளும் தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளை சேர்ந்த உள்ளூர் அணிகளும் போட்டிகளில் பங்கு பெறும்.
கேப் கோப்ராஸ் அணியில் அம்லா, பீட்டர்சன், ஜஸ்டின் கெம்ப், ரிச்சர்ட் லெவி போன்ற நட்சத்திர ஆட்டகாரர்கள் உள்ளனர். நார்தன் டிஸ்ட்ரிக்ஸ் அணியை எடுத்துக்கொண்டால் வில்லியம்சன், டிம் சவுதி, வாட்லிங் போன்ற சிறந்த வீரர்களை இவ்வணியும் தன் வசம் கொண்டுள்ளது.