8ஆவது ஐபிஎல் போட்டி 3ஆவது லீக் போட்டி நேற்று புனேவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. இதலில் முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய பஞ்சாப் 8 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அப்போது பந்தை சிக்சரை நோக்கி அடித்தார். அங்கே எல்லைக் கோட்டிற்கு அருகே நின்று கொண்டிருந்த டிம் சவுதி பிடித்தவுடன் தடுமாறிய நிலையில் வெளியே எறிந்தார். அப்போது அருகில் ஓடி வந்து கொண்டிருந்த கருண் நாயர் தாழ்வாக வந்த அந்தப் பந்தை கேட்ச் பிடித்தார். இந்த அற்புதமான கேட்ச்தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய திருப்பு முனையாக அமைந்தது.