வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் பங்குபெறும்போது, வீரர்கள் தங்கள் காதலிகளை அழைத்து செல்ல தடைவிதித்துள்ளது, இந்திய கிரிக்கெட் வாரியம்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், மற்றும் 3 நாடுகள் பங்கேற்கும் ஒருநாள் போட்டி ஆகியவற்றில் விளையாடவுள்ளது. இதில் 2 டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், எஞ்சிய 2 டெஸ்ட் போட்டிகள் ஜனவரி 10 ஆம் தேதியுடன் முடிகிறது.
பின்னர் உலக கோப்பை போட்டிகள் பிப்ரவரி முதல் மார்ச் வரை ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடக்கிறது. எனவே 4 மாதங்கள் வரை இந்திய அணி ஆஸ்திரேலியாவில் இருப்பதால், இந்திய வீரர்கள் தங்கள் மனைவிகளுடன் இருக்க கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்தது.