’எப்போதும் சவாலான வீரர்’ - ஜாகிர் கானுக்கு சச்சின் புகழாரம்

வியாழன், 15 அக்டோபர் 2015 (17:38 IST)
இந்திய அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஜாகிர் கான் இன்றுடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
 

 
இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “எனக்கு தெரிந்தவரையில், கூல்-ஆக பந்துவீசக் கூடிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர். பேட்ஸ்மேன்களை சிந்திப்பதற்கு அதிக நேரம் கொடுக்காமல் பந்துவீசக்கூடியவர். எப்போதும் சவால் அளிக்கக்கூடிய வீரர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜாகிர் கான் ஓய்வும்.... நிகழ்த்திய சாதனைகளும்.....
 
மற்றுமொரு செய்தியில், “அவர் தனது புதிய வாழ்க்கையின், புதிய அத்தியாயத்தில் சிறந்த முறையில் செயல்படுவார் என்று நிச்சயமாக நம்புகிறேன். உங்களிம் ஓய்விற்கு பிறகான வாழ்க்கையில் எல்லாம் வெற்றியடைய வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்