இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜக்மோகன் டால்மியா நேற்றிரவு கொல்கத்தாவிற்கு வருகை தந்தார். அவரை கொல்கத்தா விமான நிலையத்தில் வரவேற்க டால்மியாவின் நண்பர் ஒரு அறக்கட்டளையிலிருந்து சுமார் 50 அனாதை குழந்தைகளை வரவழைத்துள்ளார். இந்நிலையில் டால்மியாவை வரவேற்க அந்த குழந்தைகள் அனைத்தும் சுமார் இரவு 11.30 மணி வரை பூங்கொத்துகளுடன் காத்திருந்துள்ளனர்.