இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, முதல் டி20 போட்டியில் வெற்றிபெற்றது. இரண்டாவது போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் தென்னாப்பிரிக்கா அணி தொடரை கைப்பற்றி விடும், இதனால், வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. இதனால் தற்போது தீவிர பயிற்ச்சியில் இந்திய அணி வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெறும் இந்தப் போட்டி இரவு ஏழு மணியளவில் தொடங்குகிறது.