வெற்றி பெறுவோம் என்று நினைக்கவில்லை: ஹஸ்ஸி

சனி, 15 மே 2010 (15:46 IST)
FILE
தனது அபார ஆட்டத்தினால் 24 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 60 ரன்கள் எடு்த்து ஆஸ்ட்ரேலிய அணியை இறுதிக்கு தகுதிபெறச் செய்த மைக்கேல் ஹஸ்ஸி, தனது அணி வெற்றி பெறும் என்று தான் நினைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

உலகக் கோப்பை இருபதுக்கு 20 இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்ட்ரேலிய அணி வென்றது. இறுதி ஓவரில் 5 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார் ஹஸ்ஸி.

“இந்த ஆட்டம் எனக்கு மிகச் சிறந்த உணர்வைத் தந்தது. வெற்றி பெறுவோம் என்று நான் சற்றும் நினைக்கவில்லை. இறுதிக் கட்டத்தில் எவ்வளவு பலத்துடன் மட்டையை வீச முடியுமோ அவ்வளவு பலமாக வீசினேன். வெற்றி பெற்றதை இன்னமும் என்னால் நம்ப முடியவில்ல” என்று ஹஸ்ஸி கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்