இலங்கை 483 ரன்கள் குவிப்பு

சனி, 22 அக்டோபர் 2011 (18:00 IST)
அபுதாபியில் நடைபெறும் பாகிஸ்தான், இலஙை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் சங்கக்காராவின் இரட்டைச் சதம் மற்றும் பிரசன்ன ஜெயவர்தனேயின் சதம் ஆகியவற்றால் 483 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்க, பாகிஸ்தானுக்கு 20 ஓவர்களில் 170 ரன்கள் தேவை என்ற நிலையில் பாகிஸ்தான் விளையாடி வருகிறது.

சங்கக்காரா 211 ரன்கள் எடுத்து அசார் அலி பந்தில் ஆட்டமிழந்தார். பிரசன்ன ஜெயவர்தனே 120 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

உமர் குல் 4 விக்கெட்டுகளையும், சீமா, அஜ்மல், அசார் அலி,ஜுனைத் கான் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பாகிஸ்தான் ஃபீல்டிங் படு மோசமாக இருந்தது. மொத்தம் 6 கேட்ச்களைக் கோட்டைவிட்டனர். இதனால்தான் வெற்றிப்பாதையை தவறவிட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்