அப் தக் சப்பான் வெளியாவதை முன்னிட்டு தபாங், சிங்கம் படங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை நானா படேகர் வெளியிட்டார். தபாங், சிங்கம் போன்ற போலீஸ் கதையுள்ள படங்கள் ஆட்டம் பாட்டத்துக்குதான் முக்கியத்துவம் தந்து வெளியாகின்றன. அவை மக்களை ஒருபோதும் சென்றடையாது என்று கூறியிருந்தார்.
தபாங், சிங்கம் படங்கள் மக்களின் ஆதரவுடன் பாக்ஸ் ஆபிஸை கலக்கியவை. அப் தக் சப்பான் இரண்டாம் பாகமோ, வெளியான முதல்நாளே, இந்தியின் மிக மோசமான சீக்வெல் என்ற பெயரை பெற்றுள்ளது.