முன்னாள் காதலர்கள் காதலர்களாக நடிக்கும் தமாஷா

வெள்ளி, 28 ஆகஸ்ட் 2015 (15:18 IST)
ரன்பீர் கபூரும், தீபிகா படுகோனும் முன்னாள் காதலர்கள். பிறகு வழக்கம் போல் அவர்களுக்குள் பிரிவு வந்தது. ரன்பீர் கத்ரினாவை சேர்த்துக் கொண்டார்.
 

 
ரன்பீர், தீபிகா பிரிவின் போது, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தீபிகா கலந்து கொண்டார். அப்போது, ரன்பீருக்கு என்ன பரிசளிக்க விரும்புகிறீர்கள் என தீபிகாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், நிறைய காண்டம் பரிசளிக்க விரும்புகிறேன். அதுதான் ரன்பீருக்கு இப்போது தேவை என்றார்.
 
இந்த விஷயம் அப்போது சர்ச்சையானது.
 
ஓகே. நிகழ்காலத்துக்கு வருவோம். இந்த முன்னாள் காதலர்கள் இம்தியாஸ் அலியின் தமாஷா படத்தில் நடித்து வருகின்றனர். செப்டம்பர் 21 படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என ரன்பீர் அறிவித்துள்ளார்.
 
ரன்பீரும், தீபிகாவும் கடைசியாக இணைந்து நடித்த, யா ஜவானி ஹை திவானி படம் 100 கோடியைத் தாண்டி வசூலித்தது. அதனால் தமாஷா படத்தை அனைவரும ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்