சல்மான் கான் உருவப் பொம்மை எரிப்பு - பாஜக வெறியாட்டம்

சனி, 8 அக்டோபர் 2016 (14:48 IST)
பாகிஸ்தானை சேர்ந்த கலைஞர்களை தீவிரவாதிகளை போல கருதக்கூடாது. அவர்கள் தீவிரவாதிகள் அல்ல. தீவிரவாதத்தையும், கலையையும் தொடர்புப்படுத்தி பார்க்க கூடாது என சல்மான் கான் தெரிவித்திருந்தார்.

 
நியாயமான இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்று உத்திரபிரதேச பாஜகவினர் வெறியாட்டத்தில் இறங்கினர். அவர்கள் சல்மான் கானின் உருவப் பொம்மையை எரித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
தேசபக்தியின் பெயரைச் சொல்லி தேசத்தை துண்டாடும் வெறியாட்டத்தை தேசம் முழுவதும் பாஜகவினரும், ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தள் போன்ற இந்து அடிப்படைவாத அமைப்புகளும் முன்னெடுத்துள்ளது கவலைக்குரிய விஷயமாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்