ஹிட் கொடுத்ததால் கன்னட சினிமாவை விட்டு ஓடமாட்டேன்… ரிஷப் ஷெட்டி கருத்து!

புதன், 29 நவம்பர் 2023 (10:02 IST)
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸான காந்தாரா திரைப்படம் பாராட்டுகளைப் பெற்று  இந்தியா முழுவதும் வசூலில் கலக்கியது. ஆனால் இந்த திரைப்படத்தில் காடுகளில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு எதிரான கருத்துகள் உள்ளதாக இடதுசாரியினர் கடுமையான விமர்சனங்களை வைத்தனர்.

இதையடுத்து இப்போது அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் வேலைகள் தொடங்கியுள்ளதாக தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தெரிவித்திருந்தார். படத்தின் 100 ஆவது நாள் விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் ரிஷப் ஷெட்டி “காந்தாரா படம்தான் இரண்டாம் பாகம்.  இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் நடக்கும் கதைதான் அடுத்த பாகத்தில் சொல்லப்பட உள்ளது. இந்த படத்தில் தெய்வத்தின் பின்னணி பற்றி சொல்லப்படும்.” எனக் கூறியுள்ளார். சமீபத்தில் காந்தாரா சேப்டர் 1 படத்தின் முதல் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டது.

இந்நிலையில் கோவாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பேசிய ரிஷப் ஷெட்டி “ஒரு ஹிட் கொடுத்து விட்டதால் கன்னட சினிமாவை விட்டு ஓடமாட்டேன். தொடர்ந்து கன்னட சினிமாவின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்” எனக் கூறியுள்ளார். ரிஷப் ஷெட்டியின் இந்த பேச்சு ராஷ்மிகா மந்தனாவை தாக்கும் விதத்தில் அவர் பேசியுள்ளதாக பலரும் விவாதித்து வருகின்றனர். கன்னட சினிமா உருவாக்கிய ராஷ்மிகா இப்போது கன்னட படங்களில் நடிப்பதில்லை என்பதால் அவர் மேல் அங்கு விமர்சனங்கள் எழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்