ஆடை குறித்த விமர்சனம்; எனக்கு பிடித்ததை அணிகிறேன்; பிரியங்கா

புதன், 1 மார்ச் 2017 (20:03 IST)
ஆஸ்கர் விருது விழாவில் கலந்துக்கொண்ட நடிகை பிரியங்கா தனது உடை குறித்த எழுந்த விமர்சனங்களை கண்டு கொள்ளவில்லை. 


 

 
89வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவில் கொலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கலந்துக் கொண்டார். இந்த விழாவில் சிவப்பு கம்பளத்தில் வரவேற்பில் அசத்தலான உடை அணிந்து நடந்த பிரியங்கா தனது உடையால் அனைவரையும் கவர்ந்தார்.
 
அவருடைய உடைக்கு சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன. இதுகுறித்து பேட்டியளித்த பிரியங்கா கூறியதாவது:-
 
என் உடைகள் குறித்த விமர்சனங்கள் எனக்குப் பழகிவிட்டன. எனக்கு என்ன பிடித்திருக்கிறதோ, எது எனக்குச் சவுகரியமாக உள்ளதோ அதை அணிகிறேன். மற்றவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அது அவர்கள் விருப்பம் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்