இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி ஜெய்ப்பூரில் பத்மாவதி படத்தின் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருந்த போது கர்னி ராஜ்புட் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் படப்பிடிப்புதளத்தில் தாக்குதல் நடத்தி பொருட்களை அடித்து நொறுக்கியதுடன் பன்சாலியையும் கடுமையாக தாக்கினர். இந்தத் தாக்குதல் அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் கடும் புயலை கிளப்பியது.