கவர்ச்சி உடை: கங்கனா ரணாவத்தை ரசிகர்கள் முற்றுகை

செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (10:56 IST)
கவர்ச்சி உடை அணிந்து வந்த நடிகை கங்கனா ரணாவத்தை ரசிகர்கள் முற்றுகையிட்டதால், அவர் அவசரமாக காரில் ஏறி தப்பினார்.

 
நடிகைகள் பலர் பொது நிகழ்ச்சிகள் மற்றும் பட விழாக்களுக்கு கவர்ச்சி உடை அணிந்து வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள். இதனால் சர்ச்சைகளுக்கு ஆளாகிறார்கள். 
 
பல நடிகைகள் கவர்ச்சி உடைகளில் விழாக்களுக்கு வந்து ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி போலீசாரால் மீட்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. நடிகை கங்கனா ரணாவத்தும் தற்போது கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களிடம் சிக்கி தப்பித்தால் போதும் என்று ஓடிய சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. 
 
இந்தியில் வெளியான ‘குயின்’ படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். இந்தி பட உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையும் இவர்தான். ஒரு படத்துக்கு ரூ.12 கோடி வாங்குவதாக கூறப்படுகிறது. 
 
மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள கங்கனா ரணாவத் முதுகில் துணி இல்லாமல் திறந்த மேனியுடன் கவர்ச்சியாக வந்து இருந்தார். ரசிகர்களும் அவரை முற்றுகையிட்டு கேலி-கிண்டல் செய்தார்கள். நிலைமை மோசமாவதை அறிந்த கங்கனா, அந்த இடத்தை விட்டு நகர்ந்து அவசரமாக காரில் ஏறி சென்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்