படப்பிடிப்பு தளத்தில் பதற்றமாக இருந்தேன் - சூப்பர் ஸ்டார்

வியாழன், 28 ஜனவரி 2021 (22:08 IST)
நடிகர் அஜய் தேவ்கான் இயக்கத்தில் உருவாகும் மே டே படப்பிடிப்பில் கலந்துகொண்ட சூப்பர் ஸ்டார் அமிதாப்  பச்சன் தனக்குப் பதட்டம் ஏற்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான். இவர் நடிகை காஜொலின் கணவர்ன்  ஆவார். இவர் தற்போது மே டே என்ர படத்தை பிரமாண்டமாக முறையில் இயக்கிவருகிறார்.

சமீபத்தில் கொரோனா கால ஊரடங்கினால் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெறவில்லை. மத்திய அரசு சில தளர்வுகள் அறிவித்துள்ள நிலையில் மே டே படத்தின்  படப்பிட்ப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் நாள் படப்பிடப்புத்தளத்தில் தனக்கு ஏற்பட்ட மனநிலை குறித்துப் பதிவிட்டுள்ளார்ல்.

அதில், எனக்குப் புதிய படத்தின் படப்பிடிப்புகளில் கலந்துகொள்ளும்போத், என் நடிப்பை ஏற்றுக்கொள்வார்களா? மாட்டர்களா ??என்ற அதிர்ச்சியில் பயத்தில்தான் பதற்றத்துடன் இருக்கிறேன்.அப்போது எனக்கு  ஒளிந்துகொள்ளலாம்  என்பது போலிருக்கும்  எனத் தெரிவித்துள்ளார்.

ரஜினி, கமல்ஹாசன் போன்ற சூப்பர்ஸ்டார்களுக்கே சூப்பர் ஸ்டார் அமிதப் பச்சன். அவர் இத்தனை பணிவுடன் கூறியுள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இப்படத்தில் நடிக்கும் ராகுல் ப்ரீத்சிங், அமிதாப்பின் டுவிட்டர் பக்கத்தில், ஒரு பெரிய நட்சத்திரத்துடன் நடிக்க நான் தான் பதற்றப்படவேண்டுமெனக் கூறியுள்ளார். இப்புகைப்படம் வைரலாகி வருகிறது.

T 3796 - नई फ़िल्म का पहला दिन , और हालत ख़राब ! tension apprehension नर्वस इयं pic.twitter.com/fH9IRhI1Dm

— Amitabh Bachchan (@SrBachchan) January 27, 2021
 
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்