தனது வீட்டுக்குள்ளேயே போக முடியாமல் பாதுகாவலர்களால் தடுக்கப்பட்ட ஷாருக் கான்

புதன், 10 டிசம்பர் 2014 (18:35 IST)
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மீண்டும் ஒரு பிரச்சனையில் சிக்கி உள்ளார். நடிகர் ஷாருக் கானின் வீடு மும்பையின் மன்னத் பகுதியில் உள்ளது. சமீபத்தில் அறியப்படாத காரணங்களுக்காக மன்னத்தில் உள்ள தனது சொந்த வீட்டுக்குள்ளே அனுமதிக்கபடாமல் பாதுகாவலர்களால் தள்ளப்பட்டார்.
பிடிவாதமாக அவரது வீட்டுக்குள் அவர் நுழைய முயன்றபோது பாதுகாப்பு அதிகாரிகள் கோபமாக அவர் உள்ளே செல்வதை தடை செய்தனர். ஷாருக் கானின் மனைவி, அவர் மீது கோபமாக இருந்தார். அதனால் பாதுகாவலர்களிடம் கூறி ஷாருக் வீட்டுக்குள் நுழைவதை தடை செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
 
ஆனால் உண்மையில் நடந்தது என்ன?

ஷாருக் கானின் ஃபேன் (Fan)  என்ற தனது அடுத்த படத்தில் இந்தக் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஷாருக் கானுடைய தீவிர ரசிகர் வேடத்தில் ஷாருக் கான் நடிக்கிறார். படத்தின் இயக்குனர் மணீஷ் சர்மா. இந்தப் படத்தை ஆதித்ய சோப்ரா, யஷ் ராஜ் பிலிம் பேனரில் தயாரிக்கிறார்.
இந்த படத்தின் சில காட்சிகள் மன்னத்தில் ஷாருக் கான் வீட்டின் முன் எடுக்கப்பட்டது. புதிய தோற்றத்தில் இருந்த ஷாருக் கான் வீட்டிற்கு வெளியே  பாதுகாவலர்களால் தள்ளப்படுவது போல் ஷூட்டிங் எடுக்கப்பட்டது.

இந்த படம்  வெளிநாட்டு சிறப்பு மேக்கப் மேன்களை கொண்டு ஷாருக் கானுக்கு மேக்கப் செய்து புதிய தோற்றத்தை கொண்டு வந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்