மீண்டும் தாவுத் இப்ராஹிம் கதையை இயக்கும் ராம் கோபால் வர்மா

புதன், 3 பிப்ரவரி 2016 (15:04 IST)
அண்டர் வேர்ல்ட் கதைகளின் அத்தாரிட்டியான ராம் கோபால் வர்மா கொஞ்ச நாள் அதுபோன்ற படங்களை எடுக்காமலிருந்தார்.


 

 
ஏன், இந்தியில் அவர் படம் இயக்கியே கொஞ்ச நாள் ஆகிறது. இந்நிலையில், தனது அடுத்தப் படத்தை இந்தியில் இயக்குவதாக அறிவித்துள்ளார்.
 
தாவுத் இப்ராஹிம், சோட்டா ராஜன், சோட்டா ஷகில், அபு சலீம் போன்ற மும்பையின் பிரதான தாதாக்களின் கதைதான் வர்மாவின் புதிய படம். இந்தப் படத்துக்கு அவர் 'கவர்மெண்ட்' என பெயர் வைத்துள்ளார்.
 
வர்மாவின் இந்திப் படங்கள் வரிசையாக தோல்வியடைந்த நிலையில், இந்த மும்பை தாதாக்கள் வர்மாவுக்கு வெற்றியைத் தேடித் தருவார்களா?

வெப்துனியாவைப் படிக்கவும்