சாதனை படைக்க தவறிய பேங் பேங்

சனி, 4 அக்டோபர் 2014 (15:42 IST)
ஹிர்த்திக் ரோஷன், கத்ரினா கைஃப் நடிப்பில் வெளியான பேங் பேங் திரைப்படம் முதல் நாள் வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை.
பேங் பேங் இந்த வாரம் திரைக்கு வந்தது. இந்தியாவில் மட்டும் நாலாயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகளில் படம் வெளியானது. வெளிநாடுகளையும் சேர்த்தால் மொத்தம் 5100 திரையரங்குகள். இந்தியப் படமொன்று இவ்வளவு அதிக திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல்முறை. அதனால் முதல்நாள் வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்த்தனர்.
 
ஆனால் முதல்நாள் 27.54 கோடிகளை மட்டும் வசூலித்து ஐந்தாவது இடத்தையே பேங் பேங் பிடித்தது. 36.22 கோடிகளுடன் தூம் 3, 33.12 கோடிகளுடன் சென்னை எக்ஸ்பிரஸ், 32.93 கோடிகளுடன் ஏக் தா டைகர், 32.09 கோடிகளுடன் சிங்கம் ரிட்டர்ன்ஸ் ஆகியன பேங் பேங் படத்திற்கு முன் உள்ளன. 
 
ஹிர்த்திக் ரோஷன் படங்களில் இதுவரை அதிக முதல்நாள் ஓபனிங்காக க்ரிஷ் 3 படமே இருந்தது. 25.50 கோடிகள் என்ற அதன் ஓபனிங்கை பேங் பேங் (27.54 கோடிகள்) தாண்டியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்