நான்கு தினங்களில் 28.25 கோடிகள் வசூலித்த பாதல்பூர்

புதன், 25 பிப்ரவரி 2015 (13:11 IST)
பிரபல திரைக்கதைகயாசிரியரும், இயக்குனருமான ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருக்கும் பாதல்பூர் திரைப்படம் விமர்சகர்களின் பாராட்டுடன் வெற்றிகரமாக ஓடுகிறது. 
வருண் தவான், நவாசுதீன் சித்திக் நடித்திருக்கும் இந்த டார்க் மூவி வெளிநாடுகளிலும் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது.
 
இந்தியாவில் இப்படம் வெளியான முதல்நாள் 7 கோடிகளை வசூலித்தது. இரண்டாவது நாள் 8.75 கோடிகள். ஞாயிறு அன்று 8.25 கோடிகள். திங்கள்கிழமை 4.25 கோடிகளை வசூலித்துள்ளது. மொத்தமாக 28.25 கோடிகள்.
 
பாதல்பூர் போன்ற இறுக்கமான ஒரு திரைப்படம் இவ்வளவு கோடிகளை நான்கு தினங்களில் வசூலித்தது ஆச்சரியம்தான்.

வெப்துனியாவைப் படிக்கவும்