கன்னட நடிகை அவந்திகா ஷெட்டி ராஜா கன்னடா மீடியம் எனற படத்தில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் மீது பாலியல் புகார் அளித்தார். இச்செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அப்படத்தின் நாயகன் குருநந்தன், அவந்திகா மீது குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
சரியான நேரத்தில் ஷூட்டிங் வரமட்டார். ஒருமுறை மும்பை சென்று அங்கேயே 20 நாட்கள் தங்கிவிட்டார். இதனால் படப்படிப்பு பாதிக்கப்பட்டது. அவந்திகா படக்குழுவினரிடம் பேச மாட்டார். அவருக்கு தான் ஐஸ்வர்யா ராய் என நினைப்பு. ஐஸ்வர்யா ராய் கூட இப்படி சீன் போட மாட்டார், என்றார் குருநந்தன்.