குத்தாமல் குடையாமல் மரியாதையுடன் ஒரு தமிழ் கலைஞனை அவர்கள் பேட்டி எடுக்கிறார்கள் என்றால், அது ரஹ்மான் மட்டும்தான். அவர்களின் கர்வத்தைத் தாண்டிய கௌரவத்தை சர்வதேச அளவில் ரஹ்மான் பெற்றிருப்பதால் வந்த பணிவாக இருக்கலாம்.
பேட்டியில், ரஹ்மானின் எளிமை மற்றும் பணிவு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு ரஹ்மான் சொன்ன பதில் யாரையும் சபாஷ் போட வைக்கும். தன்னை குறித்த அந்தக் கேள்விக்கு தென்னிந்திய கலைஞர்கள் அனைவரையும் உள்ளடக்கிய பதிலை தெரிவித்தார். எப்படி?