அக்ஷய்குமாரின் பேபியை பார்ப்பாரா மோடி?

வெள்ளி, 23 ஜனவரி 2015 (15:03 IST)
எத்தனை வித்தியாசங்கள் இருந்தாலும் ஒரு விஷயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியும், இந்நாள் பிரதமர் மோடியும் ஒரு விஷயத்தில் ஒன்று. யாரால் இவர்களை சந்திக்க முடிகிறதோ இல்லையோ, சினிமா நட்சத்திரங்கள் நினைத்தால் பொசுக்கென்று சென்று இவர்களை சந்தித்து கைகுலுக்கி விட்டு வரலாம்.
 

 
சமீபத்தில் பிரதமரை சந்தித்தவர் நடிகர் அக்ஷய் குமார். 
 
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து இருவரும் சர்ச்சை செய்யவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். பிறகு எதற்கு இந்த சந்திப்பு?
 
அக்ஷய் குமார் நடித்த பேபி இன்று வெளியாகியுள்ளது. ஏ வெட்னெஸ்டே, ஸ்பெஷல் 26 படங்களை இயக்கிய நீரஜ் பாண்டேயின் மூன்றாவது படம் இது. தீவிரவாதத்தை மையமாகக் கொண்ட இந்தப் படத்தை வடஇந்திய ஊடகங்கள் ஊதிப்பெருக்கி கொண்டாடி வருகின்றன. இந்தப் படத்தை மோடி பார்க்க வேண்டும் என்று இந்த சந்திப்பின் போது அழைப்பு விடுத்தார் அக்ஷய்.
 
மோடி பார்ப்பாரா பேபியை?

வெப்துனியாவைப் படிக்கவும்