100 கோடி கிளப்பில் இணைந்த சிங்கம் ரிட்டர்ன்ஸ்

சனி, 23 ஆகஸ்ட் 2014 (13:33 IST)
வெளியான ஐந்து தினங்களில் 100.68 கோடிகளை வசூல் செய்து 100 கோடி கிளப்பில் இடம்பிடித்துள்ளது சிங்கம் ரிட்டர்ன்ஸ்.
ரோஹித் ஷெட்டியின் படம் என்றால் மசாலா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். தமிழில் வெளியான சிங்கத்தை ரோஹித் ஷெட்டி அதே பெயரில் அஜய்தேவ் கானை வைத்து இயக்கினார். படம் ஹிட்டாக அவரே கதை எழுதி இரண்டாம் பாகம் சிங்கம் ரிட்டர்ன்ஸை எடுத்தார். 
 
கடந்த வாரம் வெளியான படம் முதல் ஐந்து தினங்களில் 100.68 கோடிகளை இந்திய திரையரங்குகளிலிருந்து வசூலித்தது. இது தவிர ஆடியோ உரிமை, தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை, வெளிநாட்டு உரிமை என லம்பாக பல கோடிகள் வரும். 
 
அஜய்தேவ் கானின் சினிமா சரித்திரத்தில் இதுதான் அதிகபட்சம் வசூல் செய்த படம். அடுத்த வருடம் சிங்கம் 3 -வது பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்