சிறுமிகளை பாலியல் தொழிலில் தள்ளும் கும்பலை போலீஸ் அதிகாரியான ராணி முகர்ஜி துரத்திப் பிடிப்பதுதான் மர்தானி படத்தின் கதை. ராணி முகர்ஜி இந்தப் படத்துக்காக சண்டையெல்லாம் போட்டார். படம் ஹிட்டாகும், மர்தானி இரண்டாம் பாகம் எடுப்போம் என்றெல்லாம் படம் வெளியாகும் முன் கூறி வந்தார்.
சென்ற வெள்ளிக்கிழமை வெளியான படம் அன்று 3.46 கோடிகளையும், சனி 4.79 கோடிகளையும், ஞாயிறு அதிகபட்சமாக 6.21 கோடிகளையும் வசூலித்தது. பரவாயில்லை, வசூல் நாளுக்குநாள் அதிகரித்துள்ளது என்று மகிழ்ச்சியடைய முடியாது. காரணம், திங்கள்கிழமை படத்தின் வசூல் 2.44 கோடிகளாக கீழிறங்கியது. திங்கள்வரை இதன் வசூல் 16.89 கோடிகள் மட்டுமே. வெளிநாட்டு வசூலையும் சேர்த்தால் 21.14 கோடிகள்.