பிபாசா பாசுவின் திருமண விருப்பம்

வியாழன், 24 ஜூலை 2014 (12:44 IST)
மாடலிங்கிலிருந்து சினிமாவுக்கு வந்தவர் பிபாசா பாசு. எப்போதும் மாடர்ன் உடையில் மட்டுமே பார்க்க முடியும் இவரது திருமண விருப்பம் அப்படியே மாறாக உள்ளது. பாரம்பரிய பெங்கால் மணப்பெண் உடையில் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார் பிபாசா.
மாடலிங் உலகில் இருக்கும் போதே பிபாசாவும், ஜான் ஆபிரகாமும் காதலித்தனர். இரண்டு பேரும் ஒன்றாகவே குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் வழக்கமாக எல்லா ஜோ‌டிகளுக்ககும் நடுவில் ஏற்படுவதுபோல் இவர்களுக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். ஜான் ஆபிரகாம் சட்டென்று ஒரு திருமணம் செய்து கொண்டார். ஜானை பிரிந்தாலும் அவரது திருமணம் பிபாசாவுக்கு ஓர் அடிதான். 
 
2012 -ல் நடந்த அமிதாப்பச்சனின் 70 -வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பிபாசாவுக்கு வேறொரு இணை கிடைத்தது. நடிகர் ஹர்மன் பவேஜா. எனக்காகவே படைக்கப்பட்டவர் என்றெல்லாம் காதல்மொழி பேசி வந்தாலும் திருமணம் குறித்து இருவரும் இன்னும் யோசிக்கவில்லை. இந்நிலையில் டெல்லியில் நடந்த நகைக்கண்காட்சியில் ராம்ப் வாக்கில் பிபாசாவும் கலந்து கொண்டார். அப்போது மணமகள் உடையில் அவர் ராம்ப் வாக் செய்தார்.
 
என்னுடைய திருமணத்தை பிரமாண்டமாக நடத்த விரும்புகிறேன். நான் பெங்காலிப்பெண். அதனால் என்னுடைய திருமணத்தின் போது பெங்காலின் கலாச்சாரப்படி பெங்கால் பெண்ணைப் போன்று உடை அணியவே விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். 
 
பிபாசாவுக்கு 35 வயதாகிறது. திருமண உடை பற்றி கூறுகிறாரே தவிர, ஆமாம் ஹர்மன் பவேஜாவைதான் திருமணம் செய்யப் போகிறேன் என்று இதுவரை பிபாசா சொன்னதில்லை. மணமகன் இல்லாமலே மணமகள் ஆகலாம் என்று நினைக்கிறாரா?
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்