மாடலிங் உலகில் இருக்கும் போதே பிபாசாவும், ஜான் ஆபிரகாமும் காதலித்தனர். இரண்டு பேரும் ஒன்றாகவே குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் வழக்கமாக எல்லா ஜோடிகளுக்ககும் நடுவில் ஏற்படுவதுபோல் இவர்களுக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். ஜான் ஆபிரகாம் சட்டென்று ஒரு திருமணம் செய்து கொண்டார். ஜானை பிரிந்தாலும் அவரது திருமணம் பிபாசாவுக்கு ஓர் அடிதான்.
2012 -ல் நடந்த அமிதாப்பச்சனின் 70 -வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பிபாசாவுக்கு வேறொரு இணை கிடைத்தது. நடிகர் ஹர்மன் பவேஜா. எனக்காகவே படைக்கப்பட்டவர் என்றெல்லாம் காதல்மொழி பேசி வந்தாலும் திருமணம் குறித்து இருவரும் இன்னும் யோசிக்கவில்லை. இந்நிலையில் டெல்லியில் நடந்த நகைக்கண்காட்சியில் ராம்ப் வாக்கில் பிபாசாவும் கலந்து கொண்டார். அப்போது மணமகள் உடையில் அவர் ராம்ப் வாக் செய்தார்.