மனித மனதின் குரூரத்தை வெளிக்காட்ட இந்தக் காட்சிகள் அவசியம் என்று அவர்களிடம் வாதிட்டிருக்கிறார் ஆதித்ய சோப்ரா. ஆனாலும் சிறுமியின் தொடைகளில் ரத்தம் வழியும் காட்சியை நீக்கியுள்ளனர். கற்பழிப்பு குறித்த வசனம் படத்தில் இடம்பெறுகிறது. அதேநேரம் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் பார்க்கத்தகுந்த ஏ சான்றிதழை சென்சார் படத்துக்கு தந்துள்ளது.