அடுத்த வருடத்துக்கு தள்ளிப்போன அனுராக் காஷ்யபின் கனவுப் படம்

சனி, 23 ஆகஸ்ட் 2014 (13:42 IST)
அனுராக் காஷ்யபின் கனவுப் படமான பாம்பே வெல்வெட் அடுத்த வருடம் மே மாதத்துக்கு தள்ளிப் போயுள்ளது.
 
மெயின்ஸ்ட்ரீம் சினிமாவிலிருந்து விலகி படங்கள் எடுத்து வந்த அனுராக் காஷ்யப் கமர்ஷியல் நீரோட்டத்தில் கலந்து உருவாக்கிய படம் பாம்பே வெல்வெட். ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா நடித்துள்ள இந்தப் படத்தை அனுராக் மற்றும் அவரது நண்பர்களின் பாண்டம் ஃபிலிம்ஸும், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவும் இணைந்து தயாரித்துள்ளன. இந்த வருடம் நவம்பர் 28 படத்தை வெளியிடுவதாக திட்டம். தற்போது பட வெளியீடு அடுத்த வருடம் மே மாதத்துக்கு தள்ளிப் போயுள்ளது.
 
படத்தின் விஎஃப்எக்ஸ் வேலைகள் இன்னும் முடிவடையவில்லை. விரைவில் முடிந்துவிடும் என்று தவறாக கணித்ததால்தான் பட வெளியீட்டை தள்ளி வைக்க வேண்டியதாயிற்று என அனுராக் காஷ்யப் விளக்கமளித்துள்ளார்.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்