இலங்கையில் வழக்கமாக, நாளொன்றுக்கு 4 அல்லது 5 தற்கொலைச் சம்பவங்கள் பதிவாகின்ற நிலையில், காதலர் தினத்தின் பின்னர் வரும் நாட்களில் தற்கொலை எண்ணிக்கை பெருமளவில் அதிகரிப்பதாக டாக்டர் விஜேரத்ன தெரிவித்தார்.
இந்த தற்கொலைகளுக்கான சரியான காரணங்கள் விசாரணைகளிலிருந்து வெளிப்படாத நிலையில், காதலர் தினம் மற்றும் அதனை ஒட்டிய நாட்களில் நடக்கும் தற்கொலைகளுக்கு மனத் துயரங்கள் முக்கிய காரணமாக இருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.