கடந்த ஆகஸ்ட் மாதம் இஸ்லாமிய அரசு அமைப்பினர் யாசிடி இன மக்கள் வசித்துவந்த கிராமங்கள் மீது தாக்குதல்களை நடத்தியதை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். பலநூற்றுக் கணக்கான யாசிடி மக்களை கொன்றொழித்த இஸ்லாமிய அரசு அமைப்பின் தீவிரவாதிகள் அம்மக்களின் சமய நம்பிக்கைகள் தொடர்பில் வெறுப்பு கொண்டுள்ளனர்.