எச்ஐவி இருப்பதாக கண்டறியப்பட்டவுடன் மருந்து கொடுக்க ஆரம்பித்தால், அது அந்த நபர்களின் ஆயுட்காலத்தை நீட்டிக்கும், மற்றவர்களுக்கு அது பரவுவதை குறைக்கவும் வாய்ப்பு ஏற்படும் என்று சர்வதேச சுகாதார அமைப்பு கூறுகிறது. அந்த வைரஸே எய்ட்ஸ் நோய் வருவதற்கு காரணமாக உள்ளது.
முன்னர் இருந்த வழிகாட்டுதலின்படி எச் ஐவி தாக்குதல் ஏற்பட்டால், எந்த அளவுக்கு மனிதர்கள் அதை எதிர்த்து தாக்குப்பிடிக்க முடியும் என்பதைக் கண்டறியும் வரை மருத்துவர்கள் காத்திருக்க அறிவுரை வழங்கப்பட்டிருந்தது.