ஆப்பிரிக்கா அல்லது ஆசியாவில் நான்கு கோடி சிறுவர்களில் அரைவாசிப் பேர் ஐந்து வயதாவதற்கு முன்னரே கடும் பருமனாகிவிடுவதாகவும், இதற்கு வளர்ந்து வரும் நாடுகளில் ஆரோக்கியமற்ற மற்றும் சர்க்கரை கலந்த குடிபானங்களின் தீவிர சந்தைப்படுத்தலே காரணம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்போது சிறுவர்கள் வெளியில் விளையாடுவதை தவிர்த்து, இணைய விளையாட்டுக்களில் அதிக நேரம் செலவிடுவதால் அவர்களுக்குத் தேவையான உடற்பயிற்சி இல்லாமையும் இந்தப் பிரச்சினைக்கு காரணம் என்றும் உலக சுகாதார நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.