நான் காக்கும் கடவுள், காவல் ஆணையரிடம் ஆலோசனை செய்ய வேண்டும்: பெண் கலாட்டா

செவ்வாய், 29 ஜூலை 2014 (15:15 IST)
சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு நேற்று மதியம் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்தார். அங்கிருந்த காவல்துறையினரிடம் “நான் இந்த உலகத்தை காக்க வந்த கடவுள். அனைவருக்கும் நேரில் சென்று உதவி செய்து வருகிறேன்.
 
காவல் ஆணையரும் பொது மக்களின் புகார் மனுக்களை பெற்று புகார்தாரர்களுக்கு உதவி செய்து வருகிறார் என்று கேள்விப்பட்டேன். எனவே, அவரை சந்தித்து காக்கும் பணியை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்த வேண்டும். எனவே, என்னை ஆணையரிடம் அழைத்து செல்லுங்கள் என்று கேட்டார். இதைக் கேட்டு பாதுகாப்பு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இன்று ஆணையர் விடுமுறை என்று கூறி அவரை திருப்பி அனுப்பினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்