கடந்த 25 ஆண்டுகளாக ஐக்கிய நாடுகள் சபை உலகளவில் பட்டினியால் வாடும் மக்கள் தொகையை கணக்கிட்டு வரும் நிலையில், அந்தத் தொகை இப்போது 800 மில்லியனுக்கும் குறைவாக உள்ளது என ஐநாவின் ஒரு அங்கமான உணவு மற்றும் விவசாய அமைப்பு கூறியுள்ளது.
உலகின் மக்கட் தொகை பெருகி, மோதல்கள் மற்றும் இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டாலும், பட்டினியால் வாடும் மக்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.