இரண்டு மீட்டர்கள் உயரமான அந்த விளக்கை ஒரு பணியாளர் துப்பரவு செய்துகொண்டிருந்தபோது, அது விழுந்ததாகவும், அங்கிருந்த சுற்றுலா பயணிகள் பயத்தினால் வாசலை நோக்கி ஓடியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினார்கள்.
பணியாளர்களின் அஜாக்கிரதையே அது உடைந்ததற்கு காரணம் என்று சுற்றுலா வழிகாட்டிகள் கூறும் அதேவேளை, அது மிகவும் பழசாகிவிட்ட காரணத்தினாலேயே உடைந்திருக்கக்கூடும் என்று சம்பவம் குறித்து விசாரித்துக்கொண்டிருக்கும் அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் கூறுகிறார்கள்.