காபூலில் தற்கொலைத் தாக்குதல். 10 பேர் பலி

திங்கள், 1 பிப்ரவரி 2016 (20:11 IST)
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மத்திய பகுதியில் தற்கொலை குண்டுத் தாக்குதல் ஒன்று நடந்துள்ளது.


 

 
குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டின் துணை உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
 
தாலிபனுக்கு எதிரான கிளர்ச்சித் தடுப்பு பிரிவு அமைந்துள்ள தேசிய சிவில் ஒழுங்கு காவல்துறையின் தலைமையகத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
 
கடந்த மாதத்தில் காபூலில் பல தற்கொலைத் தாக்குதல்கள் நடந்தமை குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்