இலங்கையில் தற்போது 5 கள்ளுக்கடைகளை நடத்துவதற்கு மட்டுமே அனுமதி உள்ளது.தற்போது இலங்கை செயலாளர் விடுத்துள்ள உத்தரவின்படி, தடையின்றி எத்தனை கள்ளுக்கடைகளை வேண்டுமானாலும் ஆரம்பிப்பதற்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறிய அச்சாஜி தேரர் இதன் முலம் பெரும் சமூகப் பிரச்சினைகள் உருவெடுப்பதற்கு வாய்ப்புக்கள் இருப்பதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் அரசு இம்மாதிரியான தீர்மானங்களை எடுக்க முடியுமா என்று கேள்வி எழுப்பிய அச்சாஜி தேரர், இலங்கை செயலாளரின் உத்தரவை ரத்துசெய்வதற்கு ஜனாதிபதி உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று கூறினார்.