1949-ம் ஆண்டுக்குப் பின்னர் முதற்தடவையாக இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.இந்த திருப்பம் கடும்போக்கு சிங்கள தேசியவாதிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், பிரிவினை கோரிய விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டுப் போர் முடிந்து 7 ஆண்டுகள் கடக்கின்ற நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் முன்னெடுக்கின்ற நல்லிணக்க முயற்சிகளின் அங்கமாக இந்த இருமொழி தேசிய கீதம் பார்க்கப்படுகின்றது.