அமெரிக்காவின் தெற்கு கரோலைனா மாகாணத்தில் வெள்ளையின போலீஸ்காரர் ஒருவர், ஆயுதமின்றி விலகியோடும் கருப்பின ஆண் ஒருவரை சுட்டுக் கொல்வதாகக் காட்டும் வீடியோ வெளியானதை அடுத்து அந்த போலீஸ்காரர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
வெள்ளையின அதிகாரிகளால் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் சிலர் கொல்லப்பட்ட சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தை மத்திய புலனாய்வு நிறுவனமாக எஃப்பிஐ -யும் நீதித்துறையும் சேர்ந்து விசாரிக்கின்றன.