இதுவரையில் 60 சடலங்களை மூழ்கித் தேடும் மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர்.
வலுவான நீரோட்டம் காரணமாகவும், நீர் கலங்கி பார்க்க முடியாமல் இருப்பதன் காரணமாகவும் இவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
கப்பலின் தலைமை மாலுமி தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
கப்பலை விட்டு பயணிகளை வெளியேற்றுவதா வேண்டாமா என்ற முடிவை தலைமை மாலுமிதான் எடுக்க வேண்டும் என கடலோரக் காவல்படையினர் கப்பல் கவிழ ஆரம்பித்த நேரத்தில் அறிவுறுத்தி இருந்தனர் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.