இந்த விவாதம் ஸ்காட்லாந்து மக்களை இரு வேறு தரப்புகளாக பிரித்து, குடும்பங்களிலும், நண்பர்களிடையேயும் அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகளைத் தூண்டியது.
தேர்தலில் வாக்களிக்க ஸ்காட்லாந்தின் வாக்களார்களில் 97 சதவீதத்தினர் பதிவு செய்திருக்கும் நிலையில், ஸ்காட்லாந்தின் தேர்தல் வரலாற்றிலேயே இந்த நாள் மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும் என்று பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.